ஞானசுந்தரம்
சங்கத் தமிழ்படிக்க, சத்தான நூலெழுத
உங்கள் மடல்வரிகள் ஊக்குவிக்கும் – தங்களின்
அன்பறிந்து உள்ளமயில் ஆடிக் களிக்கிறதே
நின்பண்பு, வள்ளலார்க்கு நேர்
ஆயிரமாய் இங்கே அறிஞர்கள் உண்டெனலாம்
ஞாயிறாய் நீ, தமிழ் ஞாலத்தில்
– ஓயாதீர்
அன்னைத் தமிழ்ப்பணி ஆயுளைக் கூட்டிவிடும்
நின்னைப் புகழும் நிலம்.
ஆகாஉம் பேரில் அறிவழகு
மின்னுதே
ஓகோ எனவளரும் உம்ஆற்றல்
– ஆகாரம்
ஊட்டுகிறாய் தாய்தமிழ்க்கே உன்புதுச்சொல் தேடலால்!
காட்டுகிறோம் நன்றியைக் காண்.
அன்புடன்
கோ. மன்றவாணன்
No comments:
Post a Comment