பொய்கள் அமோகமாக விற்கும்
பெருஞ்சந்தை இது
நேற்று நடந்து சென்றவர்
இன்று
இன்னோவா காரில் பயணிக்கிறார்
இதுபோல் இல்லை
இலாபம் கொழிக்கும் தொழிலொன்று
வெள்ளுடை வேந்தர்களாக
வீதிவலம் வருகிறார்கள்
தேசம் அழுக்காகிறது
மாறுவேடம் தரித்தது
மன்னராட்சி
வாரிசுகளுக்கே அரசாட்சி
இனி,
காமராசர் கக்கன் வரலாறுகளின்
சாம்பலும் கிடைக்காது
ஊரெங்கும் ஊழல்தீ
கோ.
மன்றவாணன்
No comments:
Post a Comment