Saturday, 15 June 2019

சுய தரிசனம்


விண்ணும் மண்ணும் தெரிகிறது உன்
விழிவாசலில்
உன்னை அறிந்ததுண்டா
ஒரு நாளேனும்... ஒரு நொடியேனும்...?

உருவத்தை அழகாக்குகிறாய்
கண்ணாடி பார்த்து
உள்ளத்தை அழகாக்க எதன்
முன்னாடி நிற்பாய்?

உன்னை யாரென்று
உனக்குக் காட்டும்
வாழ்வில் வரும் இடர் ஒவ்வொன்றும்

உன்
பலத்தை அறிந்ததுண்டா?
பலவீனத்தைப் புரிந்ததுண்டா?
இரண்டையும் எடைபோட்டால்
எந்தப்பக்கம் சாய்வாய் நீ?

கோ. மன்றவாணன்

No comments:

Post a Comment