திரையில் எழுந்தருளிய
திருமகள்
கொட்டுகிறாள்
கூடமெங்கும் பொற்காசுகளை...
இன்று அமாவாசைதான்
என் அறைக்குள்
பூரண நிலவு
தண்ணீர்ப் பஞ்சம் நாடெங்கும்
அருவி
ஆரத் தழுவுகிறது என்னை
புன்னகைக்கிறாள்
பூவிழி சிமிட்டுகிறாள்
கவிதை வாசிக்கிறாள்
கண்ணாடி வேலியை ஊடுருவி
சிந்திய வண்ணத் திட்டுகளைத்
தொட்டேன்
சிறகு விரித்துப் பறந்தன
கிளையில் அமர்ந்து
கிளிகள் பேசுகின்றன
உயிர்கொடுத்த
ஓவியனைப் புகழ்ந்தபடி...
கோ. மன்றவாணன்
No comments:
Post a Comment