Friday, 27 July 2018

அடுத்த வரி



















அடுத்த வரி தேவை
அழகாய்க் கவிதை
விழிதிறக்க

இரவு வானத்தை
இறவாணத்தை
அண்ணாந்து பார்த்தபடியே இருக்கிறேன்

வெறுங்கையோடு திரும்புகிறேன்
கம்பன்
கடலில் மூழ்கியும்

அடுத்து அடுத்தென
மொட்டு விரித்துக்கொண்டே இருக்கிறது
முற்றத்து மல்லிகை
என்னை
ஏளனமாய்ப் பார்த்து

ஊர்வசியோ மேனகையோ
ஊடுருவ முடியாத வெளியில்
உறக்கம் பசி மறந்து
தவம் கிடக்கிறேன்...
அடுத்த வரிக்காக

-கோ. மன்றவாணன்


No comments:

Post a Comment