அடுத்த வரி தேவை
அழகாய்க் கவிதை
விழிதிறக்க
இரவு வானத்தை
இறவாணத்தை
அண்ணாந்து பார்த்தபடியே இருக்கிறேன்
வெறுங்கையோடு திரும்புகிறேன்
கம்பன்
கடலில் மூழ்கியும்
அடுத்து அடுத்தென
மொட்டு விரித்துக்கொண்டே இருக்கிறது
முற்றத்து மல்லிகை
என்னை
ஏளனமாய்ப் பார்த்து
ஊர்வசியோ மேனகையோ
ஊடுருவ முடியாத வெளியில்
உறக்கம் பசி மறந்து
தவம் கிடக்கிறேன்...
அடுத்த வரிக்காக
-கோ.
மன்றவாணன்
No comments:
Post a Comment