நள்ளிரவு
இருளில் கோடு வரையும்
வெள்ளைமழை
தூரத்து மலையில் இருந்து
அவசரமாய் இறங்கும்
அருவி
அமைதியாகக் குளிக்கும்
சாலைகள்
புதுசிவன் புதுநக்கீரன் சொற்போர்
பூக்களைத் தழுவிய மழைக்கு
மணமுண்டா?
தாமரைக் குளத்தில்
தவளைகள் நடத்தும்
இசை அரங்கு
மூடிய அறைக்குள் குறட்டைவிடும் உன்னை
நிராகரித்து நடக்கிறது
மழையிரவு
-கோ. மன்றவாணன்
No comments:
Post a Comment