முதல் தனிமையின் கதகதப்பில்
கவலை இன்றிக் கிடந்தேன்
கருவறைக்குள்
வெளிவந்தேன்
விழிதிறந்தேன்
அகல வாய்விரித்தது
அமைதியற்ற உலகம்
கண்ட நொடியே
கதறினேன் கலங்கினேன்
இனி தனிமை
எப்போது வாய்க்கும் என
மறைந்து
எரிந்து கரைந்து போனால்தான்
புதைந்து சிதைந்து மட்கினால்தான்
தளிர்விடுமோ
தனிமை
-கோ. மன்றவாணன்
No comments:
Post a Comment