Sunday, 10 June 2018

வாழ்க்கையெனும் போர்க்களம்

















முன்னோர்கள் அனுபவித்தார்கள்
முதலாம் உலகப்போர் ரத்த வெள்ளத்தை
இரண்டாம் உலகப்போர் கொலைபீடத்தை

நிமிடம்தோறும் அனுபவிக்கிறோம்
நிகழ்கால வாழ்க்கையில்.
மூன்றாம் உலகப் போரின்
முன்மாதிரியை

சொர்க்கம் போகவே ஆசை
சொக்கநாதனிடம் வேண்டுகிறார்கள்
அப்படியானால்
நாம்வாழும் வாழ்க்கை
நரகம்தானே

லஞ்சம் வஞ்சம் ஆடம்பரம்
மோசடி ஜாலம் கொடுந்தந்திரம்
இவையே வாழ்வென்றால்...
எதிர்கொள்வது போர்க்களம்தானே...

அடுத்த வீட்டில்
ஒப்பாரி பாடக் காரணமாகிவிட்டுத்
தன்வீட்டில்
தாலாட்டுப் பாடவே விரும்புகிறார்கள்

எல்லாரும் காந்தியாய் மாறுவது எப்போது?
இந்த வாழ்க்கை, பூவனமாய் மாறும் அப்போது!

-கோ. மன்றவாணன்

No comments:

Post a Comment