Thursday, 14 June 2018

வெல்லும் சொல்





              இன்னல் இழைக்காமல் இருந்ததில்லை
              எந்தப் போரும்

              ரத்த போதையில்
              ரவுடித்தனம் செய்கின்றன
              போரில் பெற்ற புகழெல்லாம்

              அசோகரைச் சாட்சித் தேரில்
              அழைத்து வந்து
              போதிக்கிறது வரலாறு
              போர் தீர்வாகாது என்று

              விடுதலைத் தவத்தில்
              வெற்றி கொண்டாடியது 
              காந்தியின் ஒருசொல்
                அகிம்சை

              கடைப்பிடியுங்கள்
              காந்தியத்தை
              நாடென்றாலும்
              வீடென்றாலும்

              அடங்கிப் போனது
              வெள்ளைச் சிங்கம் அன்று
              அகிம்சைப்புல் தின்று

             -கோ. மன்றவாணன்

No comments:

Post a Comment