Sunday, 10 June 2018

என்றும் என் இதயத்தில்...



















திமுதிமு என்று மோதும்
திருவிழா நெரிசலில் அவளிருந்தால்
அவளை மட்டும் படம்பிடித்து விடுகிறது
என் கண்கள்
எத்தனை தொலைவில் இருந்தாலும்

கடல்மணலில் அவள் நடந்துபோன போது
கவிதையாய் விட்டுச் சென்ற சுவடுகளைக்
காற்றுக் கலைக்கும்முன்
கண்களில் ஒத்திக்கொண்டு வந்துவிடுகிறேன்

நான்
இரவில் நிலவைக் கண்டாலும்
எட்டிப் பார்க்கிறாள் அங்கிருந்தும்

உலக
ஓவியர்கள் வரைந்த பெண்ணோவியங்களைக் காண
ஓவியக் காட்சிக்கு அவளுடன் சென்றேன்

அழகோவியங்கள் எழுந்துவந்து
அவளுக்கு மாலை சூட்டின

என்
இதயத்தைத் திறந்து உள்ளே சென்றவள்
பூட்டிக்கொண்டாள்


-கோ. மன்றவாணன்

No comments:

Post a Comment