ஆனாலும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்
வசீகர முகம்
வஞ்சனைக்கு
அது
முகத்தோல் உரிக்கும்போது
முழுவதும் நீலம் பாய்ந்திருக்கும் நம்வாழ்க்கை
வஞ்சச் சோறு தின்றே தடித்திருக்கின்றன
எந்த இதிகாசமும்
எந்தக் காவியமும்
உன்கையே வாள்தூக்கும்...
உன்தலையை வெட்டி வீழ்த்தும்...
வேடிக்கை பார்த்து
வெற்றியைக் கொண்டாடும்
விசை அழுத்திய வஞ்சம்
அன்பெது வஞ்சமெது
பிரித்தறிய ஒரு பறவையுமில்லை
பெருவெளியில்
யாரறிவார்
ஆசி வழங்கும் துறவிக்கும்
அந்தப்புரங்கள் உண்டு
“வஞ்சனை செய்வாரோடு இணங்க வேண்டாம்”
வா... புலவனே...
வந்து அடையாளம் காட்டு!
கோ. மன்றவாணன்
No comments:
Post a Comment