தூரத்து நட்சத்திரம்
துணைக்கு வரும்
தொலைவைக் கடக்கலாம்
உச்சிவான் நிலவு
உடன் வரும்
இருள்பயம் நசுக்கி நடக்கலாம்
இருள்காட்டில்
இரவுக்கூட்டில்
ஏற்றிவைப்பார் அகல்விளக்கு ஒருவர்
கண்முளைக்கும் அப்போது
காட்டுக்கும்
இருட்டுப் பள்ளத்தாக்கில் இருந்து
ஏற முயல்கிறோம் எல்லாரும்
ஒளியை அள்ளி உடலில் பூசிக்கொள்ளவே
வேதங்கள் விளக்குகின்றன
“ஒளியால் நிரம்பிய உடல்தான்
எந்தக் கடவுளுக்கும்”
ஒளி தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறது
“நம்பிக்கையின் உயிர்வடிவம்
நான்”
சுற்றிலும் இருள்வெளி
தூரத்தில் சுடர்த்துளி
போதுமே வெற்றி உன்னருகே....
-கோ. மன்றவாணன்
No comments:
Post a Comment