Monday, 22 January 2018

தூரத்து வெளிச்சம்





              தூரத்து நட்சத்திரம்
              துணைக்கு வரும்
              தொலைவைக் கடக்கலாம்

              உச்சிவான் நிலவு
              உடன் வரும்
              இருள்பயம் நசுக்கி நடக்கலாம்

              இருள்காட்டில்
              இரவுக்கூட்டில்
              ஏற்றிவைப்பார் அகல்விளக்கு ஒருவர்
              கண்முளைக்கும் அப்போது
              காட்டுக்கும்

              இருட்டுப் பள்ளத்தாக்கில் இருந்து
              ஏற முயல்கிறோம் எல்லாரும்
              ஒளியை அள்ளி உடலில் பூசிக்கொள்ளவே

              வேதங்கள் விளக்குகின்றன
              “ஒளியால் நிரம்பிய உடல்தான்
              எந்தக் கடவுளுக்கும்”

              ஒளி தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறது
              “நம்பிக்கையின் உயிர்வடிவம்
              நான்”

              சுற்றிலும் இருள்வெளி
              தூரத்தில் சுடர்த்துளி
              போதுமே வெற்றி உன்னருகே....


              -கோ. மன்றவாணன்

No comments:

Post a Comment