Tuesday, 16 January 2018

யுத்தம் செய்யும் கண்கள்





              வேல்விழி என்றும்
              வாள்விழி என்றும்
              புலவர்கள் சொன்னபோதே
              புரிந்தது
              போர்செய்யும் கண்கள் இவையென்று

              மாமன்னர்களும்
              மகாகவிஞர்களும்
              போரில் தோற்றவர்களே
              அந்தரங்க வரலாறு
              அவிழ்க்கப்பட்டால்

              ராணுவ ரகசியங்களைக்
              ராத்திரியில் கைப்பற்றும் ராசி
              பெண்ணுக்கு உண்டு
              அவளின்
              கண்ணுக்கு உண்டு

              நீர்மூழ்கிக் கப்பல்போல்
              வெளித்தெரியாமல் சென்று
              வீழ்த்தும் சக்தி
              விழிகளுக்கு உண்டு
              வீழ்ந்தவர் சொன்ன மெய்யிது

              கவிபேசும் கண்களுக்குள்
              ஆயத்தமாய் இருக்கும்
              ஆயுதக் கிடங்கு  

              தோற்றுப் போவதே
              சுகம்
              யுத்தம் செய்யும் கண்களிடம் சரண்அடைந்து

                -கோ. மன்றவாணன்

No comments:

Post a Comment