
மிழற்றிப் பாருங்கள்
மெதுவாக வீணையை
அறிவீர்கள்
இரும்புக் கம்பிகளுக்குள்
இனிய இதயம் உண்டு
என்பதை!
விரல்களின் மொழிபுரிந்து
உரையாடுகிறது
வீணை
உலகப் பொதுமொழியில்
எந்த ஓவியரால் வரைய முடியும்
கையில் வீணை இல்லாமல்
கலைமகளை?
யாரால் கண்டுபிடிக்க முடியும்
இந்த வீணைக்குள்
எத்தனை பாடல்கள்?
நாணமுண்டு வீணைக்கும்
நங்கையின் கைதொடும்போது!
ஞானமுண்டு வீணைக்கு
நம்மனதைத் தொட்டுச் சுகமாக்கும்போது!
வீணையின் நாதம் கேளுங்கள்
உங்கள் உள்ளம்
ஒரு கோவிலாகும்….
-கோ. மன்றவாணன்
No comments:
Post a Comment