விழிபிடித்து அழைத்துச்செல்லும்
விறுவிறுப்பான நாவலின் பக்கங்கள்தாம்
ஒவ்வொரு நாளும்
பூமி மாற்றி உடுத்தும்
புத்தாடைகள்தாம்
பருவ காலங்கள் யாவும்
புவி
புதுப்பித்துக்கொள்கிறது
நாள்குளியல் செய்து
வெற்றியாளர்கள்
மெருகேறி மின்னுகிறார்கள்
ஒவ்வொரு நாளையும் அலங்காரம் செய்து
தாயைப் பழித்தவனையும் மன்னித்துவிடு
தப்பவிடாதே
நாளைப் பழிக்கும் சோதிடத்தை
வானவில் அழகெனவே
வசீகரித்து வண்ணம் பூசுகின்றன
வார நாட்கள்
நேற்று என்பது ஒத்திகை
இன்று என்பது அரங்கேறும் நாடகம்
நாளை என்பது விருதுபெறும் வைபவம்
உன்னை நம்பி உழை
எல்லா நாட்களும்
கொண்டாட்ட தினங்கள்தாம்
-கோ. மன்றவாணன்