Tuesday, 7 November 2017

மேகத்தில் கரைந்த நிலா







          மேனி தொடும் உரிமையை
          மேகத்துக்குத் தந்து
          வெட்கப்படுகிறாள் நிலா

          தொலைதூரத்து நட்சத்திரங்கள் கண்ணடித்துத்
          தொட முயன்றாலும்
          நெருங்க விடவில்லையே
          நிலாவட்டம்

          இன்னமும்
          ஒருதலைக் காதலாய்
          நிலவைக் காதலிக்கிறார்கள் கவிஞர்கள்

          வா... வா... என்றே
          அம்மாக்கள் அழைத்து ஓய்ந்துவிட்டார்கள்
          வானைவிட்டு இறங்கவும் இல்லை
          வாண்டுகளுக்காக இரங்கவும் இல்லை

          வானத்தில் அங்கங்கே புகைமூட்டம்
          நிலவில் அடுப்பெரித்துப்
          பாட்டி வடைசுடுவதால்.

          மேகம் தொடத்தொட
          நழுவி ஓடுகிறாள் நிலா
          நாணம் நடத்தும் நாடகம்

          கண்ணாமூச்சி ஆடுகிறாள் நிலா
          அமாவாசையில்
          தேடி அலைகிறது வெண்முகில்

          மேகத்தில்
          பாதிமுகம் மறைத்து
          மீதிமுகம் காட்டும் நிலவை

          எதிர்வீட்டு ஜன்னலிலும் பார்க்கிறேன்.


          -கோ. மன்றவாணன்

No comments:

Post a Comment