கம்பன் எழுதினான்
கடன்பட்டார் நெஞ்சம்போல் என்று
கந்துவட்டி இருந்திருக்கும் அன்று
கந்துவட்டிக் காரர்களுக்கும்
கார்பரேட் சூரர்களுக்கும்
ஒரே முகம்
ஒரே நகம்
மீட்டர் வட்டிக் கடன் வாங்கியவர்கள்
மீளவே வழியில்லை
புதைகுழியில் விழுந்ததுபோல்
புலிக்குகையில் நுழைந்ததுபோல்
கந்துவட்டிக் காலடியில்
கழுத்திறுகிக் கிடக்கிறது சமுதாயம்
கல்வியும் மருத்துவமும்
காசாகிப் போனதால்
நிமிடம்தொறும் ஏறுகிறது வட்டி
நீள்நாக விஷமென
தீயே நீயும் சேர்ந்துகொண்டு
தின்பதுவோ எம் மக்களை
பற்றி எரிகின்றன
பச்சிளம் குழந்தைகள்
அழுதோடி வரவில்லை
அந்த வருண பகவானும்
தீயே
தீபமாய் இருக்கும் போது
கருணை தெரிகிறது உன் முகத்தில்
தீயே
சிறுகுழந்தைகளை எரிக்கின்ற போது
மண்டையோட்டு மாலை தெரிகிறது உன் கழுத்தில்
-கோ. மன்றவாணன்
"கந்துவட்டிக் காரர்களுக்கும்
ReplyDeleteகார்பரேட் சூரர்களுக்கும்
ஒரே முகம்
ஒரே நகம்" உண்மை sir
நிதானமாக கோவம் வெளிப்பட்டுள்ளது!!
அருமை!!! அருமை!!
"புதைகுழியில் விழுந்ததுபோல்
புலிக்குகையில் நுழைந்ததுபோல்"
நன்றி மிகவும்
ReplyDelete