குருதி சிந்தும்
நெஞ்சப் பறவை அலைகிறது
நிசப்தத்தின் வெளிதேடி
போதி மரத்துக் கீழ் அமர்ந்த
புத்தன் மனதைக் கலைத்துப்
போட்டிருக்கும்
கொடுவண்டுகளின் ரீங்காரம்
துறவியின் சங்குக்குள்ளும்
சுழன்று வருகிறது பேரிரைச்சல்
தொலைதூரக் காட்டுக்குள் சென்றமர்ந்தேன்
சருகுகளில் பாம்புகள் ஊர்ந்து போகும்
சப்தங்கள்
பாலைவனத்தின் நடுப்பகுதியில் அமர்ந்து
தியானம் செய்தேன்
மண்வாரி போட்டுச் சண்டைக்கூச்சல்
போடுகிறது
சுடுகாற்று
மனிதர்களற்ற கோவிலுக்குப் போனேன்
முகத்தை உரசிச் செல்கின்றன
வவ்வால்கள்
மரணம் மட்டுமே
கைப்பிடித்து அழைத்துச் செல்லும் என்னை
நிசப்தத்தின் வெளிக்கு
-
கோ.
மன்றவாணன்
No comments:
Post a Comment