Friday, 31 March 2017

அழியாது இந்த உலகம்



        

         புகழ்போதையில் வெளித்தள்ளும்
         வாந்தியில் 
         வழுக்கி விழுகின்றன
         இலக்கிய நாற்காலிகள்!

                   
         பொன்னாடை கொண்டுபோனால்தான்
         இலக்கிய அரங்கில் 
         நுழைய விடுவார்கள் போல் இருக்கி்றது.


         பிழைமலிந்து
         விடுப்பு விண்ணப்பம் எழுதி
         அதற்கும்
         ஞான பீட விருது கேட்பார்கள்
         இவர்கள்


         சூரியன் எனப் பட்டம்
         சூட்டிக் கொண்டு உருள்கிறது
         எலிப்புழுக்கை கூட !


         அழியாது இந்த உலகம்,
         பட்டம் சூடாத 
         கவிஞன் ஒருவனைக் காணும் வரை !



           -கோ. மன்றவாணன்



No comments:

Post a Comment