வெற்றி
முரசு
தோட்டத்துப் பரணில்
தூசு படர்ந்து கிடந்த
முரசொன்றில்
உட்கார்கிறது
ஒரு பட்டாம் பூச்சி
முரசின் ஏக்கம் துடைத்து
மேலும் கீழும்
இரு கைச்சிறகுகளை அசைத்தபடியே இருக்கிறது.
சின்னதாய்ச்
சிலிர்த்து உயிர்த்து
அதிர்கிறது அந்த முரசு
வீடு முழுவதும்
வெற்றி முழக்கமெனப்
பன்மடங்காய் எதிரொலித்த
படியே இருக்கிறது முரசொலி
அந்த
இசையொலியை
இப்போது நீங்களும் கேட்கலாம்
உங்கள் மனதை
ஒரு பட்டாம்பூச்சியாய் மாற்றிக்கொண்டு…!
-கோ. மன்றவாணன்
No comments:
Post a Comment