Thursday, 29 September 2016


                



                நூலறுந்த பட்டத்தைக்
                காற்று
                விரட்டி அடித்தது
                அங்கும் இங்கும்.

                அந்தப்
                பட்டத்தின் நிழலாய்
                தரையில் தொடர்ந்தான்
                சிறுவன்.

                பட்டம்
                அலைந்து
                திரிந்து
                மிதந்து
                தளர்ந்து
                மின்கம்ப ஒயர்களில் விழுந்து
                சிக்கிக் கொண்டது.

                கீழே இருந்து
                அலறினான் சிறுவன்
                ஷாக் அடித்து

                                - கோ. மன்றவாணன்


No comments:

Post a Comment