Wednesday, 11 December 2019

அப்பாவின் நாற்காலி




















அப்பா இருந்தவரை
அந்த நாற்காலிக்குக் கூட
அஞ்சி நடந்தோம் நாங்கள்.

காலொடிந்தும்
கையொன்று உடைந்தும்
பரணில் கிடக்கிறது அது.

இன்று
எங்கள் வீட்டுக் கூடத்தை
சோபா  அடைத்துக்கொண்டது

நாங்கள் வளர்க்கும் நாயொன்று
எப்பொழுதும்
உட்கார்ந்தும்
உறங்கியும் கொண்டிருக்கிறது
அந்த சோபாவில்தான். 

-கோ. மன்றவாணன்

No comments:

Post a Comment