அப்பா இருந்தவரை
அந்த நாற்காலிக்குக் கூட
அஞ்சி நடந்தோம் நாங்கள்.
காலொடிந்தும்
கையொன்று உடைந்தும்
பரணில் கிடக்கிறது அது.
இன்று
எங்கள் வீட்டுக் கூடத்தை
சோபா
அடைத்துக்கொண்டது
நாங்கள் வளர்க்கும் நாயொன்று
எப்பொழுதும்
உட்கார்ந்தும்
உறங்கியும் கொண்டிருக்கிறது
அந்த சோபாவில்தான்.
-கோ.
மன்றவாணன்
No comments:
Post a Comment