விபத்தில் கால்நசுங்கி
நகர முடியாத
நாய்க்குச் சோறளித்தேன்
தட்டித் தட்டிக்
கம்புக்கண் கொண்டு நடந்தவரைச்
சாலையின் மறுபக்கம் கொண்டுசேர்த்தேன்
ஆலயத்தின்
அன்னதான திட்டத்துக்கு
ஆயிரம் ரூபாய் நிதியளித்தேன்
தெருவோர
ஏழைச் சிறுமிக்குப்
புத்தாடை வாங்கித் தந்தேன்
எனினும்
இந்த நாள்களெல்லாம்
இனிய நாள்களாகுமா.....
விடுதியில் விட்டிருந்த அம்மாவை
வீட்டுக்கு அழைத்துவந்த
இந்த நாளைக் கொண்டாடுகையில்!
கோ. மன்றவாணன்
No comments:
Post a Comment