எந்த
இருட்டுக்குள்ளும்
தீபம் ஏற்றி வைப்பவர்களையே
திசைகள் வரவேற்கும்
ஏற்றி வைப்பதோடு
எதுவும் முடிந்துவிடுவதில்லை
திரியை
உயர்த்திக்கொண்டே இரு
நெய்யிட்டவாறு
நீ இரு
காற்று
ஊதி அணைக்கலாம்
கவசம் அமைத்துக்
காவல் காத்திரு
இருளை
ஓடி ஓடி விரட்டுகிறது
ஒற்றை மின்மினிப் பூச்சி
கோடி கோடி மின்மினிகளின்
கூட்டம் நீ
கோ. மன்றவாணன்
No comments:
Post a Comment