Wednesday, 30 October 2019

தீபம்
















எந்த
இருட்டுக்குள்ளும்
தீபம் ஏற்றி வைப்பவர்களையே
திசைகள் வரவேற்கும்

ஏற்றி வைப்பதோடு
எதுவும் முடிந்துவிடுவதில்லை

திரியை
உயர்த்திக்கொண்டே இரு

நெய்யிட்டவாறு
நீ இரு

காற்று
ஊதி அணைக்கலாம்
கவசம் அமைத்துக்
காவல் காத்திரு

இருளை
ஓடி ஓடி விரட்டுகிறது
ஒற்றை மின்மினிப் பூச்சி

கோடி கோடி மின்மினிகளின்
கூட்டம் நீ

கோ. மன்றவாணன்

No comments:

Post a Comment