குளம்
காத்திருக்கிறது
பறவைகள் வருமென்று
வயல் பொறுத்திருக்கிறது
மறுபடியும்
பசுமை குலுங்குமென்று
பூமியின் நா
நீண்டு கிடக்கிறது வான்நோக்கி
அருவியின் கால்பதிந்த மலைப்பாறையும்
அண்ணார்ந்து பார்க்கிறது
மழைநீரில் சூடு தணிக்கச்
சூரியனும்
முந்தி வந்து நிற்கிறான்
இனிமேல் மழைக்காலம்
என்ற அறிவிப்பை
நம்பி...
கோ.
மன்றவாணன்
No comments:
Post a Comment