Monday, 2 September 2019

இனிமேல் மழைக்காலம்











குளம்
காத்திருக்கிறது
பறவைகள் வருமென்று

வயல் பொறுத்திருக்கிறது
மறுபடியும்
பசுமை குலுங்குமென்று

பூமியின் நா
நீண்டு கிடக்கிறது வான்நோக்கி

அருவியின் கால்பதிந்த மலைப்பாறையும்
அண்ணார்ந்து பார்க்கிறது

மழைநீரில் சூடு தணிக்கச்
சூரியனும்
முந்தி வந்து நிற்கிறான்

இனிமேல் மழைக்காலம்
என்ற அறிவிப்பை
நம்பி...

கோ. மன்றவாணன்

No comments:

Post a Comment