ஒரு குளம்
ஆயிரம் முகங்கள்
தாமரைகள்
குளத்தில் இறங்கி நீராடினாள்
கோதை
அறிய முடியவில்லை
ஆயிரத்தில் அவளை
சூரியனின் சுடுவிரல்கள் குளிர்கின்றனவாம்
மலர்முகம்
வருடுகையில்
கதிரவன் வரவுக்குக்
கதவு திறந்து வைத்த தாமரை
அவன் போனதும் சாத்திக் கொண்டாள்
வெண்தாமரை கலைமகளுக்கும்
செந்தாமரை திருமகளுக்கும்
சொந்தமெனச் சொன்ன போது...
அலைவட்டம் போட்டு மெல்லச் சிரித்தது
தடாகம்
தரைகுளிர நீர்தெளித்துத்
தாமரைக் கோலம் போட்டாள்
வண்டுகள் மொய்க்கின்றன
-கோ. மன்றவாணன்
No comments:
Post a Comment