வரும் பாதையில்
கொடிமலர் என அசைந்து புன்னகைத்தேன்
பார்த்த மாதிரியே தெரியவில்லை என்னை
நூலகக் கூடத்தில்
எதிரில் அமர்ந்து அவளை வாசித்தேன்
புத்தகத்தை மூடிவைத்துப் போனாள்
உணவகத்தில்
உட்கார்ந்தேன் அவளருகே
குப்பைக் கூடையில் கொட்டிச் சென்றாள்
அன்றருளிய அமுதை
அம்மன் சந்நிதியில் காத்திருந்தேன்
அவள்வணங்கும் பொழுதறிந்து
வெளிக்கும்பிடு போட்டு விரைந்தாள் மறைந்தாள்
இரவலர்க்குப் பிச்சையிட்டு.
தொடர்வண்டியில் ஏறிச் சென்றாள்
தண்டவாளத்தில் நசுங்கிக் கிடக்கிறேன்
சோடா பாட்டல் மூடியாய்
முன்பொருநாள்
அவள்மடியில் நான்கிடந்து குழல்கோதிவிட்ட
அந்தக் காட்சி மட்டும் ஒட்டிக்கிடக்கிறது
எல்லாத் திசைகளிலும்
-கோ.
மன்றவாணன்
No comments:
Post a Comment