நிலவு வராத ஒருநாளில்
மின்சாரம் இழந்த இருளில்
பார்க்கையில்
உன் விழியிரண்டும்
ஒட்டிக் கொண்டன
என்
நனவிலும்
கனவிலும்
அன்றுமுதல்
அள்ளி அருந்துகிறேன்
தீராத கவிசுரபி
இரண்டு திரைகளில்
ஒருங்கே அரங்கேறுகின்றன
எழுதாத நாடகங்கள்
சாம்பல் பூக்க வைக்கும் அந்த நெற்றிக்கண்
ஆம்பல் பூக்க வைக்கும் இந்தச் சித்திரக்கண்
உவமைக் கவிஞர்கள் ஊமைகள் ஆவார்கள்
உன் விழிகளைப் பார்த்து
ரசித்து முடியாதபடி
எத்தனை பிரபஞ்சங்கள்
உன் விழிகளில்
-கோ. மன்றவாணன்
No comments:
Post a Comment