சாதிக்க மலையேறியவர்கள்
சாவுக்குள் குடியேறினார்கள்
இளைய சூரியன்களை
எரித்தது அந்த
மலைத்தீ
இறந்து முடித்த பிறகே
மலைத்தீயை அணைத்துவிட்டுப் போனது
மறுநாள் பெய்த மழை
எந்த இலக்கையும்
எட்டலாம் என
மனதுக்குப் பயிற்சி அளிக்கிறது
மலையேற்றம்
எம் உறவுகள் இறந்த சோகத்தைத் தாங்க
யாரளிப்பார் பயிற்சி
இதயத்துக்கு?
இளம்பெண்களைத் தழுவி எரித்தது
காமுகன் போலவே
காட்டுத் தீ
கொலைக்கணக்குகளைக்
கூட்டிப் பார்த்தால்
நீதிமன்றங்கள் போதாது
நெருப்புக்குத் தண்டனையிட!
அடங்காத கொடுந்தாகம்
மரங்களைத் தின்ற தீயின் நாவுக்கு
மனிதரை ருசிக்க
சிவனிடம் வேண்டி நிற்கிறேன்
நெற்றிக்கண் கொடு
நெருப்பைச் சுட
-கோ. மன்றவாணன்
No comments:
Post a Comment