கதைகளிலும் தென்படவில்லை
தவத்துக்கு மயங்காத
கடவுள்
வஞ்சக முனிவன் வணங்கிக் கேட்டால்
மறுப்புரைக்காமல்
தன்தலையையே அறுத்துத்
தருவார் போலும் கடவுள்
தவத்துக்கு மயங்கி
சுயநலத்தால் நிரம்பி வழிகிறது
தவப் பாத்திரம்
தீயவர்களின் வேண்டுதல்கள்
நிறைவேறி விடுகின்றன
நிறைவேறி விடுகின்றன
திருப்பதி உண்டியல்தான்
தினமும் நிரம்பி வழிகிறதே...
மனம், மூளை வளர்ச்சி குறைந்த
குழந்தைகள் காப்பகத்துக்குச் சென்று
தேடித் தேடிப் பார்த்தேன் கடவுளை...
அவர்
அரசியல் தலைவர் வீட்டுக்குப் போய் இருக்கிறாராம்
வரம் அருள !
(நெற்றிக்கண் திறக்காமல் என்னை மன்னியும்
என் தேவனே...)
No comments:
Post a Comment