Thursday, 24 August 2017

தவம்







              கதைகளிலும் தென்படவில்லை
              தவத்துக்கு மயங்காத
              கடவுள்

              வஞ்சக முனிவன் வணங்கிக் கேட்டால்
              மறுப்புரைக்காமல் 
              தன்தலையையே அறுத்துத்
              தருவார் போலும் கடவுள்
              தவத்துக்கு மயங்கி

              சுயநலத்தால் நிரம்பி வழிகிறது
              தவப் பாத்திரம்

              தீயவர்களின் வேண்டுதல்கள் 
              நிறைவேறி விடுகின்றன
              திருப்பதி உண்டியல்தான்
              தினமும் நிரம்பி வழிகிறதே...

              மனம், மூளை வளர்ச்சி குறைந்த
              குழந்தைகள் காப்பகத்துக்குச் சென்று
              தேடித் தேடிப் பார்த்தேன் கடவுளை...


              அவர்
              அரசியல் தலைவர் வீட்டுக்குப் போய் இருக்கிறாராம்
              வரம் அருள !

              (நெற்றிக்கண் திறக்காமல் என்னை மன்னியும் 
              என் தேவனே...)


            -கோ. மன்றவாணன்

No comments:

Post a Comment