உயிர்ப்பயணத்தைத் தொடங்கி வைக்கிறது
ஒருதுளி விந்து
ஓராயிரம் விளக்குகளை ஏற்றிவைக்கிறது
ஒருதிரிச் சுடர்
ஒரு திருமண விருந்தை சுவையாக்குகிறது
ஒருசொட்டுக் குழம்பின் பதச்சுவை
எந்த ஊருக்கும் அழைத்துச் செல்கிறது
எடுத்து வைக்கும் ஒரு காலடி
சிந்தனை நிலவுகள் நூறு
சேர்ந்து நடக்கும் மேடையை அமைக்கிறது
தினமணி கவிதைமணி வழங்கும்
ஒரு தலைப்பு
நாறும் அறையை
நந்தவனம் ஆக்கிவிடுகிறது
ஒரு மெல்லிய
ஊதுவத்தி
தூசுப் புள்ளியில்
தொடங்கிப் பயணிக்கிறது
பிரபஞ்சம்
புள்ளியிலிருந்துதான் தொடங்கின
புவியின் முதலெழுத்தும் முதல்ஓவியமும்
குழந்தைக்குத் தன்னம்பிக்கை மலர்ந்தது
“அ” எழுதக் கற்ற முதல்நாளில்தான்
வெற்றிபெற்ற
பெரும்புள்ளிகள் யாவரும்
ஒருபுள்ளியிலிருந்து வாழ்வைத் தொடங்கியவர்கள்தாம்
ஒருபுள்ளியிலிருந்து வாழ்வைத் தொடங்கியவர்கள்தாம்
கடலாக மாறும் அதிசயம்
துளிக்கு உண்டு
துளிக்கு உண்டு
இன்றைய புள்ளியில்தான்
கருவாகி வளர்கிறது
நாளைய உலகு
-
கோ. மன்றவாணன்
No comments:
Post a Comment