Friday, 5 May 2017

கொத்திச் செல்வேன் வானத்தை...





Image result for self confidence images


இருகை இல்லாத மனிதன்
சொன்னான் :
“இந்த உலகம்
என் மடியில்”

காலில்லாத மனிதன் எழுதினான் :
“இந்த உலகம் சுற்றிவரும்
என்னை”

சிறகில்லாத பறவை சொன்னது :
“குளத்தில் அலகு நுழைத்துக்
கொத்திச் செல்வேன் வானத்தை”

இறுகிய
கல்பாறையில் முளைத்த விதை சொன்னது :
“தடையொன்றும் இல்லை கண்ணா”

நம்பிக்கை சொன்னது :
“எந்த இழப்பையும் தாண்ட முடியும்
மனக்கோல் ஊன்றி”

புதிய பக்கத்தைத் திறந்துவைத்து
வரலாறு சொன்னது :
“வா சாதிக்க”

-கோ. மன்றவாணன்


No comments:

Post a Comment