கை கோர்ப்போம்
உதிரிப் பூக்களை
ஒன்று சேர்த்தால்
மாலை
நட்சத்திரங்களைக்
கூட்டமாகப் பார்த்தால்
ஒளிமாநாடு
வெட்டுக் கத்திகளாக இல்லாமல்
ஒட்டுப் பசையாக மாறட்டும்
குடும்ப நீதிமன்றங்கள்
பிரிந்து வேண்டினால்
திரும்பிக் கொள்வான்
உன் தேவனும்.
கைகோர்த்து நின்றால்
தோற்றுத் திரும்பும்
சுனாமியும்
முகம்பார்க்க வைப்போம்
நவகிரகங்களை
மொழி,இனம்,மதம்,நாடு
தாண்டி வந்து
மனம்கோர்த்து ஆடுவோம்!
- கோ. மன்றவாணன்
No comments:
Post a Comment