Tuesday, 21 March 2017

வீர மங்கை





வீர மங்கை



தோட்டத்தில்
கிள்ளி எறிந்துகொண்டிருந்தான்
தளிர்களை ஒருவன்
பெண்ணைப் பழித்தபடி

அழகிய பெண்ணின் ஓவியத்தில்
தார்பூசிக் கொண்டிருந்தான்
பெண்ணின் வயிற்றில்
பிறந்த ஒருவன்

வீதியை
விழி பார்க்கக் கூடாதாம்
மூடிய சன்னலுக்குள் அடைத்தான்
முழுநிலவை

நங்கையவள்
நகை அணிய இசைந்தவன்
புன்னகை அணியக் கூடாதெனப்
புதுவிலங்கு மாட்டினான்

கல்விக் கூடத்தை மூடி-
கலவிக் கூடத்துக்கு வாடி
என்றான்

மெய்ப்புலியை விரட்டியவள்
பொம்மைப் புலிக்கு
அடங்கி இருந்தாள் நேற்றுவரை 

இன்றைய
நவீனப் பெண்ணுக்குப்
பதினாறு கைகள்

அனைத்துக் கைகளிலும்
ஆயுதங்கள்


கோ. மன்றவாணன்


No comments:

Post a Comment