Tuesday, 8 November 2016


ஜன்னல் நிலா


தொடர்வண்டியின் ஜன்னலோரம்
முகத்தில் காற்று உரச உரச
உட்கார்ந்திருந்தேன்
தொடர்ந்து வந்தது
தூரத்து நிலா

வீட்டுக்கு வந்து
திறந்தேன் ஜன்னலை
அங்கேயும்
அருகில் வந்து காத்துக்கிடந்தது
அதே நிலா

நிலவை
அகன்ற திடலில்
அமர்ந்து
அண்ணாந்து பார்த்தால்
கழுத்துச் சுளுக்கிப் போகலாம்

ஜன்னல் வழியாகப் பார்த்தால்
கவிஞன் ஆகலாம்

யாரும்
கதவு திறந்தால்
காற்று வரும்

காதலன் திறந்தால்
பகலில் கூட நிலவுவரும்
எதிர்வீட்டு ஜன்னலில்


- கோ. மன்றவாணன்

No comments:

Post a Comment