சுதைமண் காந்தியின்
தடியைப் பிடுங்கித்
தலையை உடைக்கிறார்கள்
காந்தி பதாகையில்
குறிதவறாது சுட்டுக்
குருதியோடச் செய்கிறார்கள்
காந்தி சாலையில்
பிராந்திக் கடைகளைத் திறந்து
ஆடுவோமே – கள்ளு
போடுவோமே என்கிறார்கள்
காந்தி விழா கொண்டாடியதாகப்
பொய்க்கணக்கெழுதிப்
பொருளாதாரத்தை உயர்த்துகிறார்கள்
காந்தியாக நடிக்கக்கூட
இந்தியர் எவருமில்லை
காந்தி பிறந்த நாளைக்
கோலாகலமாய்க்
கொண்டாடுகிறார்கள்
தொலைக்காட்சியில் குத்தாட்டம் பார்த்து
அது எப்படி?
பணத்தாளில் புன்னகைக்கும் காந்தியைப்
பாதுகாக்கிறார்களே
பெட்டி பெட்டியாய்...
-கோ. மன்றவாணன்
No comments:
Post a Comment