நிஜத்தைத் தேடி
நெடுந்தூரம் வந்துவிட்டேன்
நிலம்
நீண்டுகொண்டே இருக்கிறது
நேற்று மெய்யென மிளிர்ந்தது
இன்று பொய்யென
இருட்டுக்குள் பதுங்குகிறது
மெய்யெது பொய்யெது போட்டியில்
கலந்துகொள்ளும்
கடவுளும் தோற்றுப் போகிறான்
பிறப்பதற்கும் இறப்பதற்கும் இடையில்
மறைத்து வைத்த புதையலைத் தேடி
அலைந்து களைப்பதல்லால்
அறியேன் வேறொன்றும்
விட்டு விடுதலை ஆகிவிடும்
உயிர்ப்பறவை
நிஜத்தை
நெருங்கும் தருணத்தில்
-கோ. மன்றவாணன்
No comments:
Post a Comment