கரைதாண்ட மாட்டேன் என
ஊருக்குச் சத்தியம் செய்துவிட்டு
ஓடிக்கொண்டே இருந்தாள் காவிரி
நிலவு குளிக்க வரும்வரை
கயல்களோடு போட்டியிட்டு நீந்தினர்
மூவேந்தர் காலத்து மக்கள்
ஆழ்துளைக் கிணறுகள் இல்லை
மரகதப் பட்டுடுத்தி மகிழ்ந்தாள்
மண்மகள்
மாசு ஏதும் இல்லாத காற்று
மாசு ஏதும் இல்லாத மனசு
இரவின் மடியில் கண்துயின்றனர்
எம் மூதாதையர்
நள்ளிரவில்
தண்ணீர் லாரி வருமென்று
காத்திருந்த கூட்டத்தில்
எழுந்தடங்கியது அந்த நினைவு.
கோ. மன்றவாணன்