Saturday, 24 August 2019

நெடுவாழ்வின் நினைவு





















கரைதாண்ட மாட்டேன் என
ஊருக்குச் சத்தியம் செய்துவிட்டு
ஓடிக்கொண்டே இருந்தாள் காவிரி

நிலவு குளிக்க வரும்வரை
கயல்களோடு போட்டியிட்டு நீந்தினர்
மூவேந்தர் காலத்து மக்கள்

ஆழ்துளைக் கிணறுகள் இல்லை
மரகதப் பட்டுடுத்தி மகிழ்ந்தாள்
மண்மகள்

மாசு ஏதும் இல்லாத காற்று
மாசு ஏதும் இல்லாத மனசு
இரவின் மடியில் கண்துயின்றனர்
எம் மூதாதையர்

நள்ளிரவில்
தண்ணீர் லாரி வருமென்று
காத்திருந்த கூட்டத்தில்
எழுந்தடங்கியது அந்த நினைவு.

கோ. மன்றவாணன்