புறக்கணிப்பு
தாமதமாக
வரும் தொடர்வண்டிக்காகக்
காத்துக்
கிடக்கிறது
ஒரு கூட்டம்
குறுந்தேவதை
போல்
குழந்தை
ஒன்று
மடிதாவி
மடிதாவிச் செல்கிறது
மடிதோறும்
அங்கு
உயிர்கொண்டு
உலா வந்தது
கொஞ்சல்
இலக்கியம்
அருகே….
துவைத்தால்
கிழிந்துவிடும்
அழுக்குடையோடு
இரு பெண்குழந்தைகள்
அந்த
முகங்களில்
பாரத
மாதாவின்
பரிதாபக்
கோலம்
அந்தக்
குழந்தைகளைப்
பார்ப்பதே
தீட்டு என
குறுக்குச்
சந்துக்குள் நுழைந்து ஓடின
அங்கிருந்த
அத்தனை
விழிகளும்
- கோ. மன்றவாணன்
No comments:
Post a Comment